திங்கட்கிழமை நடக்கவுள்ள இந்தியப் பிரதமரின் பதவி யேற்பு நிகழ்வில் தன்னுடன் பங்கேற்குமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுத்த அழைப்பை
நிராகரித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். அப்படித் தான் கலந்து கொள்வதுஇ கொழும்பு அரசுக் கும் வடக்கு மாகாணத்திற்கும் இடையில் மிக வலுவான ஐக்கியம் இருப்பதாக அது எடுத்துக்காட்டக்கூடும் என்ற காரணத்தால் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பைத் தான் நிராகரிக்கிறார் என்று அவர் கூறினார்.
சமூக வலைத்தளமான ருவிற்றரில் நேற்றுக் காலை பதிவிட்ட ஜனாதிபதி மஹிந்தஇ மோடியின் அழைப்பை ஏற்று பதவியேற்பு விழாவில் பங்கெடுக்க உள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர் பகல் 11 மணிக்குஇ இந்தியப் பிரதமரின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்ளும் இலங்கைக் குழுவில் இணைந்து கொள்ளுமாறு வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஜனாதிபதி ருவிற்றரில் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்துப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மஹிந்தவின் அழைப்பை முதலமைச்சர் ஏற்பாரா? என்று அறியும் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. முதலமைச்சரின் கருத்தை அறிவதற்குப் பல தரப்பினரும் முயற்சிகளில் இறங்கினர். எனினும் மஹிந்த ராஜபக்ச ருவிற்றரில் பதிவிடுவதற்கு முன்னதாக அவரது அழைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மூலமாக முதலமைச்சருக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் இருந்து நேற்றுக் காலையில் உத்தியோகபூர்வ அழைப்புத் தொலைநகல் முதலமைச்சருக்குக் கிடைத்தது.
அதற்கு முதலமைச்சர் அனுப்பிய பதிலில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கப் போகும் நிகழ்வில் கலந்துகொள்ளத் தாமதமாகியேனும் இலங்கை ஜனாதிபதி எனக்கனுப்பிய அழைப்பைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி.
எமது அமைச்சர் குழாமுடன் பேசியதன் பின் இந்தப் பதிலை உங்களுக்கு அனுப்புகின்றேன்.
ஸ்ரீ நரேந்திர மோடியின் வரலாற்றுப் புகழ் பெற்ற தேர்தல் வெற்றியானது இலங்கை அரச தலைவர்களிடத்தில்இ வடமாகாணத்துடன் கூட்டுறவையும் ஒருங்கிணைந்து செயற்படும் தன்மையையும் எழுப்பியுள்ளமை நல்லதொரு தருணமே.
வடமாகாண மக்களின் சொல்லொண்ணாத் துயரங்கள்இ வடமாகாணசபையை இயங்கவிடாது ஏற்படுத்தப்பட்ட தடைகள் இவற்றின் மத்தியில் இந்தக் கூட்டுறவுச் சிந்தனையானது வரவேற்கத்தக்கதே. எனினும் உங்களுடைய அன்பான அழைப்பை ஏற்க முடியாதிருப்பதற்காக வருந்துகின்றேன்.
முக்கியமாக அவ்வாறு ஏற்காததற்குக் காரணம் கொழும்புக்கும் மாகாணத்திற்கும் இடையில் மிக வலுவான ஐக்கியம் இருப்பதாக அது எடுத்துக்காட்டக்கூடும் என்பதேயாகும்.
எனினும் வடமாகாண மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினர் மக்களைப் பதற்றத்துடன் வாழவே வழி செய்து வருகின்றார்கள்.
இவ்வாறான அழைப்பை நான் ஏற்றுக் கொண்டால் உண்மை நிலையை மறைத்து முகமனுக்காக ஏற்றுக்கொள்வதாக அது அமையும்.
இலங்கையிலுள்ள இந்திய உயர் தூதர் ஊடாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்கும் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை நான் ஏற்கனவே அனுப்பியுள்ளேன் என்பதைத் தெரியத் தருகின்றேன்.
உங்களுடைய அன்பார்ந்த அழைப்பால் பிரதிபலிக்கப்படும் நல்லெண்ணமும் ஒருமைப்பாட்டு உணர்வும் எமக்குள் தொடரும் என்று நான் எதிர்பார்க்கின்றேன். அவ்வாறு தொடர்ந்தால்த்தான் வடமாகாண மக்களின் தேர்தல் எதிர்பார்ப்புக்கள் நடைமுறைபடுத்தப்படும் என்பது மட்டுமன்றி எமது மக்களின் அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments[ 0 ]
கருத்துரையிடுக